Description
ஆங்கிலேயரை எதிர்த்து தீவிரமாக போராட வேண்டும். தயவுதாட்சண்யம் இல்லாமல் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று போராடியவர் திலகர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல்கட்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். பிரிட்டிஷ் அரசுக்கு இவர் சிம்மசொப்பனமாக இருந்தார். அவருடைய வாழ்க்கை கதை இளைஞர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை விளக்கமாகப் புரியவைக்கும்.
அரசியல் ரீதியான இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல்கட்ட தலைவர்கள் வரிசையில் கோகலே இடம் பெறுகிறார். ஆங்கிலேயர்களுடன் சமாதானமான முறையில் காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். காந்தியை இந்திய அரசியலுக்கு அழைத்து வந்தவர். காந்தி தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். மிதவாதியான இவர்மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் பிடித்த தலைவராக செயல்பட்டவர் லாலா லஜபதிராய். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். இவரைப் பார்த்து பிரிட்டிஷ் அரசு அஞ்சி நடுங்கியது. ஆவேசமான உரையால் மக்களுக்கு விடுதலை தாகத்தை ஏற்படுத்தியவர். பிரிட்டிஷ் தடியடியால் உயிரிழந்தவர். இந்த மூன்று தலைவர்களின் வாழ்க்கையும் முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.